சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

.



லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படத்தினால் சில இடங்களில் நஷ்டமடைந்ததால் அந்த சில விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் முருகதாசை நேரில் சந்தித்து பேச முயன்றனர்.இந்நிலையில் தனது அலுவலகத்துக்கு வந்து தன்னை சிலர் மிரட்டுவதாக முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.



மனுவை விசாரித்த நீதிபதி காவல்துறையினரை இந்த வழக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளனர்.காவல்துறையினரின் அறிக்கையை வைத்து முருகதாஸிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

.