கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.



கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து வைகைப்புயல் வடிவேலு கடந்த மாதம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.



இதனை தொடர்ந்து இரண்டாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா குறித்து ஒரு பாடலை வடிவேலு வெளியிட்டுள்ளார்.நோயாக வந்து எங்களை படுத்தியது போதும் என்ற அந்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.