விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா இறந்த நிலையில் புதிய முல்லையாக யார் நடிப்பார் என்ற கேள்வி பலர் மத்தியிலும் இருந்து வருகிறது.சிலர் முல்லை கதாபாத்திரத்தை அப்படியே முடித்துக்கொள்ளவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சித்ராவின் எபிசோடுகள் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வரை ஒளிபரப்பாகும் என்று தகவல் கிடைத்திருந்தது.இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஸ்ரீவித்யா பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Srividya Shankar (@srividya_2018)