விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.அட்லீ இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது.இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.



இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும்,படத்தின் கிரியேட்டிவ் ஹெட்டுமான அர்ச்சனா கல்பாத்தி தான் சென்னையில் இயங்கி வரும் ஏ.ஜி.எஸ் நிறுவனங்களையும் பார்வையிட்டு வருகிறார்.கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.



இது குறித்து பதிவிட்ட அர்ச்சனா கல்பாத்தி தனது வேலையையும்,தனது திரையரங்கில் படம்பார்க்க வருபவர்களையும்,தனது நண்பர்களிடம் இருந்து டிக்கெட்டிற்காக வரும் போன்களையும் மிகவும் மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார்

Missing my work,housefull shows, Ticket pressure from friends and family,the chaos of FDFS, smell of fresh popcorn,the mess made by popcorn, the sound of applause, laughter and the pin drop silence that happens during a great scene. Missing the movie experience ❤️ @agscinemas https://t.co/S06p6CaYvk

— Archana Kalpathi (@archanakalpathi) April 2, 2020