கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து பிக்பாஸ் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற வேளைகளில் நமக்கு நெருக்கமானவர்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பது தான் நமது முதல் நோக்கமாக இருக்கும்.அதற்கு பதட்டப்படாமல் கவனமாக இருக்கவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.இதுபோல் நாம் பல கடினமான சூழ்நிலைகளை கடந்துள்ளோம் இதையும் கடப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

#StayAtHomeSaveLives

A post shared by Kavin M (@kavin.0431) on