பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த டாஸ்க்கில், ரியோவுக்கு ஆஜித் உதவியதால் அவரை ரியோ கேங் தோளில் தூக்கி வைத்து கொண்டாடியது. அதனால் இங்கு Favoritism இருக்கிறதா என்கிற விவாதமும் வெடித்தது. காலர் யாரை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்பதை பற்றி யாரும் கூறக்கூடாது என ரியோ மற்றவர்களுக்கு ரூல் போட்ட நிலையில், அவர் மட்டும் எப்படி ஆஜித்திடம் எப்படி முதலிலேயே கூறிவிட்டார் என சனம் கேள்வி எழுப்பினார். தான் அஜித்துக்கு favorism செய்ததாக ரியோவே ஒப்புக்கொண்டார்.

சனம் மற்றும் அனிதா இருவரும் கேம் ஆக தான் அனைத்தையும் பார்க்கிறார்கள், அவர்கள் இடையே வந்திருக்கும் நட்பு அழகாக இருக்கிறது என ரியோ சொன்னது பற்றி சனம் வாக்குவாதம் செய்தார். தப்பான காலருக்கு போன் செய்து கேட்டீர்கள் என ரியோ போன் காலை சனம் கூறியதற்கு அவர் 'மைன்ட் யுவர் வர்ட்ஸ்' என கத்தினார்.

நாங்கள் ரெண்டு பேர் நட்பாக ஆனது ஆச்சர்யமாக இருக்கா, மற்றவர்கள் நட்பானது அது சாதாரணமானது, நாங்க மட்டும் என்ன monsters ஆ? என சனம் ஷெட்டி கோபத்துடன் கேட்டார். அனிதாவை ஏன் கிட்சன் டீமில் இருந்து மாற்றினார் ரியோ என சனம் கேள்வி எழுப்பினர். உடனே ரம்யா இந்த பிரச்சனை பற்றி ரியோவை கேட்டார். இந்த முடிவை நீங்கள் என்னை கேட்காமல் எடுத்துவிட்டார்கள் எனவும் ரம்யா குற்றச்சாட்டினர்.

ஷிவானி ரியோவை பார்த்து சீரியசாக ஒரு கேள்வி கேட்டார். ரமேஷ் அதிக நேரம் தூங்கி கொண்டிருந்தார். அவரை ஏன் எழுப்பவில்லை என ஷிவானி கேள்வி கேட்டார். ஆனால் நான் எழுப்பிக்கொண்டு தான் இருக்கிறேன் என விளக்கம் கொடுத்துவிட்டு, பின்னர் சென்று ரமேஷை எழுப்பினர்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், சனம் ரியோவிடம் வந்து பேச, என்னால் முடியல சனம், tired ஆயிடுச்சு என்று கூற, அருகில் இருக்கும் நிஷா மற்றும் அர்ச்சனா வழக்கம் போல் ரியோவிற்கு துணை நிற்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

#Day54 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/tjWuuKVyyv

— Vijay Television (@vijaytelevision) November 27, 2020