பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

பிக்பாஸ் தொடரில் மிகவும் பிரபலமானதாக பேசப்பட்டது கவின்-லாஸ்லியாவின் காதல் விவகாரம் தான்.இது அந்த தொடரனுடையே முடிந்து விட்டது.லாஸ்லியா ரசிகர்கள் அவர் எப்போது படத்தில் நடிக்கப்போகிறார் என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

தற்போது ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார்.ஆல்பர்ட் ராஜா இந்த படத்தை இயக்குகிறார்.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சந்திரா மீடியா விஷன் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.