தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.கொரோனா காரணமாக இதில் அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட சில படங்களின் ஷூட்டிங்கை நிறைவு செய்தார்

பல படங்களில் நடித்து வரும் அருண் விஜய் லாக்டவுன் நேரத்தில் கடாமீசையுடன் இருந்தார் இந்த லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவர் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் 2021 பிப்ரவரியில் தொடங்கவுள்ளது என்றும் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பூஜை மார்ச் துவக்கத்தில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பழனியில் தொடங்கியுள்ளது என்று அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Kick started the first scheduled for #AV33 with director #Hari sir in #Pazhani today..🤞❤
Walked into a local gym after shoot and worked out with these boys to give them a bit of motivation...💪
Love you all..😘 #gymlife #workoutmotivation #circuittraining pic.twitter.com/YJgeIZZkoM

— ArunVijay (@arunvijayno1) March 16, 2021