மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் பாக்ஸர்,சினம்,AV 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.அருண் விஜய் நடிக்கும் AV 31 படத்தை அறிவழகன் இயக்குகிறார்.இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு ஜிந்தாபாத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்திருந்தது.ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் டெல்லி,ஆக்ரா பகுதிகளில் தொடங்கியது.தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்ற அறிவிப்பை அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.கொரோனா பாதிப்பையும் பக்குவமாக எதிர்கொண்டு இந்த படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னைக்கு திரும்பியுள்ளோம் நீங்களும் பத்திரமாக இருங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Back to Chennai safe & sound after a wonderful schedule for #AV31 at Delhi & Agra. Tnx 2 da entire team for working cautiously during these trying times. 🙏 Thanks for all da concern. Stay safe with ur loved ones..😘@dirarivazhagan @ReginaCassandra @StefyPatel @All_In_Pictures pic.twitter.com/eITUvnjXCm

— ArunVijay (@arunvijayno1) March 17, 2020