இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,



இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.



கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரத்தை அவ்வப்போது செலவிட்டு வருகின்றனர்.நேற்று கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்துடன் லைவ் வந்தார் அனிருத்.அப்போது அபினவ் உலகத்தில் உள்ள பல நாடுகளில் கான்சர்ட் நடித்தியுள்ள அனிருத் எப்போது சொந்தஊரான சென்னையில் கான்சர்ட் செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுப்பினார்.



அதற்கு பதிலளித்த அனிருத் இந்த சம்மரில் மாஸ்டர் ரிலீஸிற்கு பிறகு ஒரு கன்சர்ட் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கொரோனாவால் அந்த திட்டம் தள்ளிப்போனது என்றும் தெரிவித்தார்.மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பின் சென்னையில் ஒரு பீச்சில் கண்டிப்பாக கான்சர்ட் நடத்துவேன் என்றும் அதற்கு யாரிடமும் டிக்கெட் பணம் வசூலிக்கப்போவதில்லை என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.