A.R.முருகதாசின் உதவி இயக்குன்னராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.



சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை தற்போது இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.



முருகதாஸ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மனம் திறந்த அஜய் 5,6 வருடங்களுக்கு முன் நான் அவரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது ஒரு கதையை எழுத அவர் எவ்வளவு கஷ்டப்படுவார் என்பதை பார்த்துள்ளேன்.காலை 7 மணிமுதல் இரவு 11 மணி வரை உதவி இயக்குனர்களுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டுள்ளார்.அவரை பற்றி தவறான செய்திகள் வரும்போது மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.அப்படி ஒருவர் கஷ்டப்பட்டு எழுதியதை கடைசியில் ஒருவர் வந்து தன்னுடைய கதை என்று தெரிவிப்பது எந்த இயக்குனரையுமே காயப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.