சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்து தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ளவர் ரியோ ராஜ். தொலைக்காட்சி சீரியல்களில் பிரபலமானதால் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகன் ஜொலித்தார். சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்தார். இதனைத்தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
கர்ப்பமாக இருந்த ரியோவின் மனைவி ஸ்ருதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரியோ நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
எனது உலகை ஆள இளவரசி வந்துவிட்டாள். எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு இணையத்தில் வாழ்த்து மழை பெய்து வருகிறது.