செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.
மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மீண்டும் சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது.ஜூன் 30 வரை மீண்டும் ஊரடங்கு காரணமாக ஷூட்டிங்குகள் ரத்து செய்யப்படுள்ளது.லாக்டவுன் இடையில் எடுத்த புகைப்படத்தை தற்போது சரண்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.