செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.



மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வளர்கின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் ப்ரோமோ வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.ஜோசியர் காளியம்மாவிடம் சக்தி சந்தோசமாக இருக்க இந்திரா பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்கிறார்.இதனை அடுத்து இந்திராவும் பரிகாரம் செய்கிறார்.