தமிழக பாரம்பரிய படி அமெரிக்கப் பெண்ணை தமிழர் ஒருவர் திருமணம் செய்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த தட்டடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி, அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகருக்கு, ஆராய்ச்சி படிப்புக்காகச் சென்றார். அங்கு, படிப்பை முடித்த அவர், அங்குள்ள அமேசான் நிறுவனத்தில் பணியில் அமர்ந்தார்.

அதே நேரத்தில், அமெரிக்காவில் புகழ்பெற்ற பிரபல காப்பீட்டு நிறுவனத்தில் எலிசபெத் என்ற இளம் பெண் பணியாற்றி வந்துள்ளார். நண்பர்களாக அறிமுகமான இவர்கள் இருவரும், கடந்த 3 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த வாரம் காதலர்கள் இருவரும் காரைக்குடி திரும்பி உள்ளனர். அங்கு இவர்கள், கந்தசாமியின் பெற்றோர்களின் சம்மதத்துடன், தமிழக பாரம்பரிய முறைப்படி, நேற்று திருமணம் செய்துகொண்டனர்.

அமெரிக்கப் பெண்ணை, நம்மூர் தமிழர் ஒருவர், முறைப்படி திருமணம் செய்து கொள்வதால், காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பலரும், இத்திருமணத்தில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இதனிடையே, தமிழக பாரம்பரிய படி அமெரிக்கப் பெண்ணை தமிழர் ஒருவர் திருமணம் செய்துள்ள நிகழ்வு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.