நண்பனின் மனைவி என்று கூட பாராமல், கதறக் கதற 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் கலஹந்தி மாவட்டம் பவானிபட்னா கிராமத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணின் கணவர், வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால், அந்த வீட்டில் அந்த பெண்ணும், அவரது மாமியார் மட்டும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கணவரின் நண்பர் ஒருவர் மாலை நேரத்தில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். திரும்பிச் செல்ல இரவு ஆனதால், தன் மகனின் நண்பன் என்பதால், அந்த நபரை, இரவில் வீட்டிலேயே தங்கிவிட்டுச் செல்லும்படி பெண்ணின் மாமியார் கூறியுள்ளார்.

அந்த நபரும், இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார். அன்றைய தினம் பிற்பகலில் இந்த பெண் வீட்டிலிருந்து வங்கிற்குப் பணம் எடுக்கப் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, முதல் நாள் வீட்டிற்கு வந்த நபர், வழியில் இந்த பெண்ணை சந்தித்துள்ளார். “நான் வங்கி வழியாகத்தான் செல்கிறேன். வண்டியில் உட்காருங்கள் உங்களை அங்கேயே இறக்கி விடுகிறேன்” என்று கூறியுள்ளார். அந்த பெண்ணும், தன் கணவரின் நண்பர் என்று தானே அழைக்கிறார் என்று நம்பி இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தார்.

சிறிது தூரம் வண்டியில் சென்ற அந்த நபர், திடீரென்று வண்டியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்று, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளார். அங்கே, இவருடைய மற்ற 2 நண்பர்கள் இருந்துள்ளனர்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து, நண்பனின் மனைவி என்றுகூடப் பார்க்காமல், கதறக் காதற மாறி மாறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் ATM கார்ட் மற்றும் அந்த பெண் அணிந்திருந்த ஜெயின் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர்.

பின்னர், அந்த பெண்ணை ஏற்றிய இடத்திலேயே, இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, வங்கி இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இறக்கி விட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நண்பனின் மனைவி என்று கூட பாராமல், கதறக் கதற 3 நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.