9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் இருவர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வேலைபார்த்து வருகின்றனர். இவர்களது மகள், புதுச்சேரியிலுள்ள உள்ள பள்ளி விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், அந்த மாணவி கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் தனது பெற்றோரைப் பார்க்க, வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். பெற்றோரைப் பார்த்துவிட்டு அவர் திரும்பும்போது, அப்பகுதியைச் சேர்ந்த 41 வயதான தாஸ், சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தாஸ் பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருக்கும்போது, அதனைப் பார்த்த தாஸின் நண்பர்கள் பொன்னையன், முத்து, ரூபன் காரல் மார்கஸ், சூர்யா, வீரையன், முருகன், கோகுல் ஆகிய 7 பேரும், அடுத்தடுத்து சிறுமியைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால், அலறித்துடித்த மாணவியை, ஒரு கட்டத்தில் விடுவித்துள்ளனர்.

பின்னர், இந்த துயர சம்பவத்தை மறந்த நிலையில், மாணவி தினமும் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி, திடீரென்று மயக்கமடைந்தார்.

இதனையடுத்து, மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, சிறுமி கருவுற்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து, சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவர்கள் வந்து விசாரித்துள்ளனர். அப்போது, கடந்த மே மாதம் தனக்கு நேர்ந்த அவலங்களைக் கூறி கதறி உள்ளார்.

இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர்கள் நாகை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரைக் கைது செய்தனர். இதனையடுத்து, தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.