மதுரையில் 80 வயது தம்பதியினர் விவாகரத்து பெற்ற நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந்த வேலுச்சாமிக்கும், அவரது மனைவி கஸ்தூரிக்கும் கடந்த 1962 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, கணவன் - மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கணவன் வேலுச்சாமி தரப்பில், விவாகரத்து கேட்டு மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையிலும், மனைவி கஸ்தூரி கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், தான் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று வேலுச்சாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டார். 

இதனையடுத்து, 80 வயது தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதனிடையே, 80 வயது தம்பதியினர் விவாகரத்து பெற்ற நிகழ்வு, நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தவர்களையும், மதுரை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.