15 வயது அத்தை மகளைக் கட்டிலில் கட்டி வைத்து, 16 வயது மாமன் கதறக் கதற பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் கூர்கான் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் பயின்று வந்த 15 வயது மாணவி, மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, மாணவியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் மாணவி கண் விழித்தார்.

இதனைத்தொடர்ந்து, மாணவியின் உடல் நலம் குறித்து ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன் அத்தை வீட்டிற்கு வந்தபோது, தனது 16 வயது அத்தை மகன், தன்னை கட்டிலில் கட்டி வைத்துக் கதறக் கதற பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது முதல் தன்னுடைய உடல் நிலை பலகீனம் அடைந்துள்ளதாகவும் பரிதாபமாகக் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சிறுமியின் தாயாரைப் பள்ளிக்கு வரவழைத்து, நடந்ததையெல்லாம் கூறியுள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார். அருகில் உள்ள காவல் நிலையத்தில் தனது 16 வயது மருமகன் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரில், தனது நாத்தனாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், தனது 15 வயது மகளை அவருக்கு உதவியாக இருக்கட்டும் என்று அனுப்பி வைத்ததாகவும், ஆனால், நாத்தினார் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், தனது மகளை, கட்டிலில் கட்டி வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 16 வயது சிறுவனைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, 15 வயது அத்தை மகளை, 16 வயது மாமன் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.