2 பள்ளி மாணவிகளைக் கடத்தி காம களியாட்டம் ஆடிய ஆட்டோ டிரைவர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 15 வயது மற்றும் 16 வயது மாணவிகள் இருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவிகள் இருவரும் மாலை வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர்கள், பல்வேறு இடங்களில் தேடிவிட்டு, இறுதியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 19 வயதான குமார், மற்றும் 21 வயதான கனகராஜ் ஆகிய இருவரும், சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி, சுற்றுலா அழைத்துச் செல்வதுபோல், திருப்பூருக்குக் கடத்திச் சென்றுள்ளதும், பின்னர், அங்குள்ள லாட்ஜில் அடைத்து வைத்து, 2 நாட்கள் பகல்-இரவு என தொடர்ந்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் அதிரடியாகக் கைது செய்து, அடைத்து வைக்கப்பட்ட 2 சிறுமிகளையும் மீட்டு, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.



மேலும், இருவரையும் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிறுமிகள் இருவர் ஆட்டோ ஓட்டுநர்களால் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.