வடசென்னை 3 குறித்து முதன் முதலாக பேசிய சமுத்திரகனி !
By Sakthi Priyan | Galatta | July 23, 2019 19:00 PM IST
சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் மூடர்கூடம் நவீன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொளஞ்சி. இப்படத்தை அறிமுக இயக்குனர் தனராம் சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கொளஞ்சி என்ற 13-வயது சிறுவனை சுற்றி நடந்த உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. படம் குறித்து கலாட்டாவிற்கு அளித்த பேட்டியில் பேசிய சமுத்திரகனியிடம் வடசென்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
வடசென்னை இரண்டாம் பாகத்தில் இறந்து விடுவேன். வேறென்ன இருக்கப்போகிறது. மூன்றாம் பாகம் எடுத்தால் அதில் என்ன பாத்திரம் என்று வெற்றிமாறன் தான் கூறவேண்டும். எப்போது ஷூட்டிங் அழைத்தாலும் சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். தனுஷ் அப்படியே தான் இருக்காரு, அசுரன் படத்திற்காக சிறிது இடை கூடியுள்ளார் என்று பேசியுள்ளார்.