ரஜினியின் கைவிடப்பட்ட படத்தின் டைட்டிலில் கார்த்தி ! மேலும் படிக்க ...
By Sakthi Priyan | Galatta | May 21, 2019 19:37 PM IST
தேவ் படத்தைத் தொடர்ந்து ரெமோ புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் இணைந்து நடிகர் கார்த்தி புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். டைட்டில் வைக்காத இந்த படத்தை கார்த்தி 19 என்று சமூக ஊடங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இப்படத்தைத் தொடர்ந்து மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்திலும், ஜீது ஜோஸ்ப் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறாராம். KGF பட நடிகர் கருடராம் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் இருந்து துவங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே மற்றோரு படத்தில் கார்த்தி பிஸியாக இருப்பதால், படக்குழுவினர் பிரேக்கில் இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.
தற்போது படத்தின் டைட்டில் சுல்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் SR பிரபுவை தொடர்பு கொண்ட போது, இன்னும் பேச்சுவார்த்தையில் தான் உள்ளது என்று கூறினார். சுல்தான் என்னும் டைட்டில் இன்னும் உறுதியாகவில்லை அது பேச்சில் தான் உள்ளது என்பதை நெருங்கிய வட்டாரம் தெளிவு படுத்தியது.