சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படம் வரும் 29-ம் தேதி வெளிவருகிறது. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படம் பொங்கலுக்கு வரவிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்.

தனது அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் ரஜினிகாந்த் படங்கள் கமிட் செய்வதிலும் பிஸியாக இருக்கிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் படம் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி பெரிதும் பேசப்பட்டது.

தற்போது இப்படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. ஏற்கனவே இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்ததாகவும் செய்திகள் கசிந்தன. படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.