புகைப்பட கலைஞரிடம் அஜித் நடந்துகொண்ட முறை ! முகநூலில் பதிவை பகிர்ந்தார்
By Sakthi Priyan | Galatta | February 22, 2019 15:00 PM IST
தமிழ் திரைதுறையில் நடிகர் எனும் அந்தஸ்த்தை தாண்டி நல்ல மனிதர் எனும் பெயரை சம்பாதித்த நடிகர்களில் ஒருவர் தல அஜித். தற்போது பழம்பெரும் புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, தனது முகநூலில் அஜித் பற்றி பதிவு செய்தார்.
ரவி கடந்த 2013-ம் ஆண்டு துபாயில் இருக்கும் தனது மகளை சந்திக்க சென்றாராம், அப்போது மகளின் வீட்டின் அருகில் அஜித் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்ததாகவும் அதில் அஜித் கலந்துகொள்கிறார் என்ற செய்தி அறிந்தவர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று அஜித்தை பார்த்தாராம்.
அதுவரை தல அஜித்துடன் பணிபுரிந்ததில்லை என்பதால் தனது கேமராவில் எப்படியாவது கிளிக்கிட வேண்டும் என்று கேட்க, மதியம் வந்து எடுங்கள் என்று அஜித் கூற. அற்புதமாக ஒரு போட்டோவை எடுத்தாராம் ரவி.