தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் கதிர். மதயானை கூட்டம் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகி இன்று பரியேறும் பெருமாளாக உயர்ந்து நிற்கிறார். 

சீரான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்துதெடுத்து, அதில் கவனம் செலுத்தி வெற்றி பயணம் மேற்கொள்ளும் திறன் கொண்டவர். கதா நாயகன் பாத்திரம் அல்லாது கதைகளில் தோன்றும் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான பரியேறும் பெருமாள் படமால் வளர்ந்து வரும் டாப் 5 ஹீரோக்கள் பட்டியலில் இவரும் இணைந்தார்.

தற்போது இவரது அடுத்த படத்தை y not ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர், நடிகர்கள் குறித்த அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது நலம்.