சூர்யாவின் என்.ஜி.கே தாமதமான காரணம் இதோ !
By Sakthi Priyan | Galatta | October 17, 2018 10:28 AM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் படம் தான் என்.ஜி.கே. தமிழ் சினிமாவை தரம் உயர்த்திய இயக்குனர்களின் ஒருவரான செல்வராகனுடன் சூர்யா முதல் முறையாக இணையும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இதன் தயாரிப்பாளரான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ். ஆர். பிரபு அவர்கள் தனது ட்விட்டர் பதிவில், நடிகர் சூர்யா அவரது 37-வது படபிடிப்பின் லுக்கிலிருந்து வந்தவுடன் என்.ஜி.கே-வின் இறுதி பணிகள் நவம்பரில் ஆரம்பமாகும் என பதிவிட்டிருக்கிறார்.
#NGK team is waiting for #Suriya na to come back from #Suriya37 look. Final leg of shoot will happen in November. Release plan details will be announced post that. Looking forward to present a great product to you all..! ✌🏼🤘🏼#ClarifyAboutNGK
— S.R.Prabhu (@prabhu_sr) October 16, 2018
சில நாட்களுக்கு முன்னர் சர்க்கார் படத்துடன் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய இயக்குனர் செல்வராகவன் திட்டமிட்டிருந்தார் எனவும், சில பல காரணங்களால் அது தள்ளிப்போனதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. விரைவில் என்.ஜி.கே ரிலீஸாகி சூர்யா ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் என நம்புகிறோம்.