கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை எடுத்து வருகிறார்.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஷபீர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.எதிலும் புதுமையாக முயற்சிக்கும் Black Sheep குழு இந்த முறை ஒரு வீடியோ மூலம் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.இந்த படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது