சிறுவயதில் சிகரம் தொட்ட சிவகார்த்திகேயனின் மகள் !
By Sakthi Priyan | Galatta | October 17, 2018 12:53 PM IST
நெருப்பு டா பாடலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் அருண்ராஜா காமராஜ் அவர்கள். திரை துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்தவர் தற்போது இயக்குனராக களமிறங்கும் படம் தான் கனா.
சிவகார்த்தியன் தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிக்கின்றனர். கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து வெளிவரும் இப்படத்தின் வாயாடி பெத்த புள்ள எனும் பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
Massive 🤙 50 million views for #VaayadiPethaPulla lyrical video from #Kanaa. #50MViewsForVaayadiLyricalVideo https://t.co/XzIaF0BWGT @Siva_Kartikeyan @KalaiArasu_ @Arunrajakamaraj @SKProdOffl@dhibuofficial pic.twitter.com/ZyMtntD5hK
— Sidhu (@sidhuwrites) October 17, 2018
அதற்க்கு முக்கிய காரணம் இப்பாடலை பாடிய மழலை பாடகி ஆராதனா சிவகார்த்திகேயன் அவர்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? என்ற பழமொழிக்கும் ஏற்றார் போல் தனது தந்தைக்கு பெருமை சேர்த்தார் ஆராதனா. அதுமட்டுமில்லாமல் ஆராதனாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். வருங்கால பின்னணி பாடகி ரெடி என்றே எதிர்பார்க்கலாம்.