கேம் ஆஃப் த்ரோன்ஸ் குறித்து நடிகர் தனுஷ் பதிவு !
By Sakthi Priyan | Galatta | May 21, 2019 10:40 AM IST
உலகளவில் இதுவரை தயாரிக்கப்பட்ட சின்னத்திரை தொடர்களில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட சீரிஸ் கேம் ஆஃப் த்ரோன்ஸ். இதன் இறுதியான சீசனான 8-ம் சீசன் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது.
தற்போது இதுகுறித்து நடிகர் தனுஷ் ட்விட்டரில், இறுதி எபிசோடில் அனைத்து கலவையான உணர்ச்சிகள் இருந்தாலும், ஒரு சகாப்தத்தின் முடிவு என்று கூறியுள்ளார். இதை உருவாக்கியவர்களுக்கு மிக்க நன்றி என்றும் பதிவு செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கி வரும் அசுரன் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். மேலும் இயக்குனர்கள் துரை செந்தில்குமார், ராம்குமார், கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.