கார்த்தி-ராஷ்மிகா மந்தனா படத்தின் தற்போதைய நிலை !
By Aravind Selvam | Galatta | June 27, 2019 16:51 PM IST
கைதி படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ள கார்த்தி அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை Dream Warrior Pictures சார்பாக S.R.பிரபு தயாரிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு பூஜையுடன் தொடங்கியது.
ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.விவேக் - மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
தற்போது பாக்கியராஜ் கண்ணன் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இதில் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவும் இணையவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.