கடமையைச் செய்வோம் தானாக வழி பிறக்கும் - STR !
By Sakthi Priyan | Galatta | November 14, 2018 14:59 PM IST
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துவருகிறார் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்து வருகிறார். அத்தாரிண்டிகி தாரேதி எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, வம்சி கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் அவர்கள் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் சிம்புவுக்கு எதிராக ரெட்-கார்டு, இனி சிம்பு நடிக்க கூடாது என்றெல்லாம் முழக்கங்கள் வெளியாகி வரும் சூழ்நிலையில், அவர் தனது ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனது ரசிகர்களுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கு ஓர் அழுத்தமான வேண்டுகோள்.
திரைத்துறையில் அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வருந்தாதீர் என்று கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு தனி நபரின் முடிவும் நம்மை ஓரங்கட்டி விட முடியாது என்றும், கவுன்சில் உறுப்பினர்களால் எடுக்கப்படும் உறுதி முடிவை வைத்து ஆராயவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
எப்போதும் அன்பை பரப்புங்கள். உங்களது தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாம் கடமையை செய்வோம் தானாக வழி பிறக்கும். பொங்கலுக்கு திரைக்கு வருவோம் என்றும் தெளிவு பட கூறியிருக்கிறார்.