இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் தற்போதைய நிலை !
By Aravind Selvam | Galatta | May 20, 2019 15:16 PM IST
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சிம்புதேவன்.கடைசியாக தளபதி விஜயை வைத்து புலி படத்தை இயக்கினார்.இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவதின் தயாரிப்பில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாரானார்.
இந்த படத்திற்கு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.வைகை புயல் வடிவேலு இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருந்தார்.வடிவேலுவுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இந்த படத்தின் ஷூட்டிங் ஒன்பது நாட்கள் மட்டுமே நடந்தது.
இன்று தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சிம்புதேவன்.இந்த புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி என்றும் வெங்கட் பிரபுவுடன் இணைவது கூடுதல் சிறப்பு என்றும் தெரிவித்திருந்தார்.மேலும் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படமும் மீண்டும் பிரச்சனைகள் தீர்ந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.