ஆவலாக காத்திருக்கும் சந்தோஷ் நாராயணன் !
By Sakthi Priyan | Galatta | November 17, 2018 14:51 PM IST
பா.இரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் திரை விரும்பிகள் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. நடிகர்கள் கதிர், ஆனந்தி, யோகிபாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ள இப்படம் சமூகத்திற்கு மிக ஆழமான கருத்தை உணர்த்தியது என்பது அனைவரும் அறிந்தது.
தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், பரியேறும் பெருமாள் படத்தின் 50-வது நாள் கொண்டாடத்தை குறிப்பிட்டு மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு இப்படம் நல்ல பாதையை அமைத்து தந்த ரசிகர்களுக்கு நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.
50 days of #PariyerumPerumal and I am so thankful to you people who made it into a movement and for putting mari selvaraj into the most desirable path in cinema. I am sure there will be some exciting and amazing pieces of art to follow starting with @dhanushkraja sir's project.
— Santhosh Narayanan (@Music_Santhosh) November 16, 2018
அதுமட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திலும் சந்தோஷ் நாராயணன் தான் இசை, அதற்க்கு மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் அறிவித்துள்ளார். கொடி, வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இப்படத்தில் தான் நடிகர் தனுஷ் உடன் இணைகிறார் சந்தோஷ் நாராயணன்.