தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். 

Official Clarification On

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். உச்ச நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் இயக்கத்தில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம் படம் திரைக்கு வந்தது. தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான நடிகர்-நடிகை தேர்வில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளார்.

இந்நிலையில் மணிரத்னத்துக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதென்றும், உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்தி வெளியானது.

Official Clarification On

இதை தொடர்ந்து சில ஊடகங்கள் உடல் நிலை குறித்து வதந்தியை கிளப்பி விட துவங்கினர். இச்செய்தி குறித்து மணிரத்னம் தரப்பினரிடம் கேட்டபோது, இயல்பாக சென்றார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. நேற்று மலை வரை அலுவலகத்தில் பணியை முடித்தவுடன் மருத்துவமனைக்கு இயல்பாக சென்றவரை பற்றி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.