தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் தற்போதைய நிலை ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | February 21, 2019 12:17 PM IST
பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற ஆவலோடு மொத்த தமிழ் சினிமாவும் காத்திருக்கிறது.இந்நிலையில் இறைவி படத்தை அடுத்து இவர் தனுஷுடன் இணைவார் என தகவல்கள் ஆங்காங்கே கசிந்தது, ஆனால் சில காரணங்காளால் அந்த படம் தள்ளிப்போனது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படம் ஜூன் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.முதற்கட்ட படப்பிடிப்பு UK-வில் நடைபெறும் என்றும் ,இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என்றும் நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.தமிழ் படம் , விக்ரம் வேதா போன்ற படங்களை தயாரித்த YNot Studios நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.
Gangster படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க வேலைகள் நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இதையடுத்து இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டணி இணையும் பட்சத்தில் வெகு நாட்களுக்கு பிறகு தனுஷ் அனிருத் இணையும் படம் இதுவாக இருக்கலாம்.இதனால் தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.