கார்த்தி நடிக்கும் அடுத்த படம் குறித்த ஸ்வாரஸ்ய தகவல் !
By Sakthi Priyan | Galatta | December 11, 2018 18:47 PM IST
2017ல் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாநகரம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்திருந்தார். படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில், முக்கியமான படமாகவும் அமைந்தது.
தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்தப் படத்திற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 17-ஆம் தேதியில் இருந்து இப்படத்தின் பணிகள் துவங்குகிறது.
படத்திற்கான திரைக்கதை பணியில் ஈடுபட்டு வரும் லோகேஷ், அவரது முதல் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள் என்று கூறியதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.