மாஃபியா ஷூட்டிங் குறித்து ப்ரியா பவானி ஷங்கர் பதிவு !
By Aravind Selvam | Galatta | August 18, 2019 15:28 PM IST
தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது .இவர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா படத்தில் நடித்து வருகிறார் லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடித்துவருகிறார்.இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் தனது ஷூட்டிங்கை நிறைவுசெய்துள்ளார் இது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று பதிவிட்டுள்ளார்.