சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மோத்தேபாளைய, ஏ.டி.காலணியைச் சேர்ந்த தினேஷ்குமார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, 16 வயது சிறுமியை அங்குள்ள தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்துள்ளார்.

girl sexual assault

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளி தினேஷ்குமார் தான் என்பதை உறுதி செய்து, கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் இதுவரை 18 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் தினேஷ்குமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், போக்ஸோ சட்டத்தின்படி ஒரு ஆயுள் தண்டனையும், சிறுமியைக் கொலை செய்தமைக்கு ஒரு ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்தமைக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை என 3 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

girl sexual assault

மேலும், ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தினேஷ்குமார் கோவை மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.