கடலூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் மக்கள் இயக்கத்தினர் !
By Aravind Selvam | Galatta | August 20, 2019 18:00 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதை தாண்டி சமூக அக்கறை கொண்ட நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
இன்று கடலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் நெய்வேலியை அடுத்துள்ள மந்தாரக்குப்பம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர்.அந்த பகுதியிலுள்ள மக்களுக்கு இலவச கழிப்பிடம்,பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள்,கல்வித்தொகை,மாற்றுத்திறனாளிகளுக்கு புடவை, வேட்டி ,அரிசி மற்றும் நரிக்குறவர்களுக்கு 10,000 உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை செய்துள்ளனர்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி N. ஆனந்த் தலைமைதாங்கி நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.இது போன்ற பல்வேறு உதவிகளை செய்து வரும் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.