தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஒய்.ஜி.மஹேந்திரன்.ட்ராமா கலைஞராக இருந்த இவர் நடிகர்,பாடகர்,கதாசிரியர் போன்ற பல்வேறு துறைகளில் ஜொலித்து வந்தார்.தற்போது இவரது தாயார் காலமானார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

93 வயதாகும் ராஜலக்ஷ்மி பார்த்தசாரதி மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.பத்திரிகையாளராக இருந்த இவர் பின்னர் சமூக ஆர்வலராகவும் பண்ணியாற்றியுள்ளார்.கல்வித்துறையில் இவர் பல உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது உடல் திநகரில் உள்ள பத்மசேஷாத்திரி பள்ளியில் பொதுமக்கள் இறுதியஞ்சலி செலுத்த வைக்கப்படவுள்ளது.நாளை மாலை 4 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கலாட்டா சார்பாக ஒய்.ஜி.மஹேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.