கணவரைக் கொன்று ஆணுறுப்பை அறுத்து நாய்க்கு போட்ட மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“கொலையும் செய்வாள் பத்தினி!” என்பார்கள். அதுதான் இங்கேயும் நடந்துள்ளது.

உக்ரைன் நாட்டில் உள்ள ஓபாரிவ் என்னும் கிராமத்தில் தான், இந்த கொடூர கொலை நடந்துள்ளது. ஓபாரிவ் கிராமத்தில் ஒலேக்‌ஷாண்டர் - மரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். ஒலேக்‌ஷாண்டர், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மரியாவை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

கணவன், பல வருடங்களாகத் தன்னை தினமும் சித்தராவதைச் செய்வதை பொறுத்துகோள்ள முடியாத மனைவி மரியா, அவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறாள். இந்நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி இரவு நேரப்பணியை முடித்துவிட்டு, கணவன் வீட்டிற்கு வந்து அசதியாக தூங்கிக்கொண்டுள்ளார். அப்போது, அவரை கழுத்தை நெரித்து மரியா கொன்றுள்ளார்.

மேலும், ஆத்திரம் தீராமல் வீட்டிலிருந்த ஒரு கோடாரியைக் எடுத்து, கொலை செய்த கணவரின் தலையையும் வெட்டியுள்ளார். அப்போதும், ஆத்திரத்தை அடக்க முடியாமல், அவரின் ஆணுறுப்பையும் வெட்டி, அதை வீட்டில் வளர்க்கும் நாய்க்குப் போட்டுள்ளார்.

கொலை தொடர்பாக அந்நாட்டு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவர்களது வீட்டிற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கடந்த 25 ஆம் தேதி மரியா ரத்தக்காயங்களுடன் காணப்பட்டதாக, அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், தாம் கணவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில், மரியா சிறையில் அடைக்கப்பட்டார்.