விராலிமலை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த ஆவூரைச் சேர்ந்த ஜீவன்ராஜ் - தங்கம் தம்பதியினருக்கு 12 வயதில் ஜட்சன் ஆபிரகாம், 9 வயதில் ஜான்சன் என 2 மகன்கள் உள்ளனர்.

children die

இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால், இருவரும் சேர்ந்து தன்னுடைய இன்னொரு நண்பனான சந்தோஷ் உடன் சேர்ந்து மொத்தம் 3 பேருமாக அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, அப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக, அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் அதிக அளவிலிருந்துள்ளன. இது தெரியாமல் 3 சிறுவர்களும் குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துள்ளனர். இதில் 3 பேருக்கும், நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.