மிரட்டலாக ரீ-என்ட்ரி அளிக்க தயாராகும் வடிவேலு !
By Aravind Selvam | Galatta | September 25, 2019 13:44 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு.சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர்.விஷாலின் கத்தி சண்டை,விஜயின் மெர்சல் உள்ளிட்ட படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார்.ஆனால் இவர் மீண்டும் நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்ட வடிவேலு நான் எப்போதும் தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்.ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க விரைவில் ஒரு நல்ல படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தலைநகரம்,கத்திச்சண்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ், இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் , வடிவேலு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இந்த படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.