திருச்சியில் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி திருவானைக்காவல் மணல்மேல் பகுதியைச் சேர்ந்த நடராஜன், பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 15 வயதில், 10 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கிறார்.

sexual assault

10 ஆம் வகுப்பு படித்து வரும் மகளுடன், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் ஒருவர், தோழியாக நெருங்கிப் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணின் வீடும் அருகிலேயே இருப்பதால், அடிக்கடி நடராஜன் வீட்டிற்கு வந்து, தனது தோழியுடன் நெருங்கிப் பேசுவதும், அங்கேயே சாப்பிடுவதுமாக இருந்துள்ளார்.

sexual assault

இதனையடுத்து, மகளின் தோழி மீது நடராஜனுக்கு மோகம் ஏற்பட்டு, அவரை அடைந்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். இந்நிலையில், வீட்டில் மனைவி மற்றும் மகள் இல்லாத நேரத்தில், அந்த இளம் பெண்ணை வீட்டிற்கு வரவைத்து, அவரை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால், நாளடைவில் அந்த பெண் கருவுற்றார். 

இளம் பெண் கருவுற்ற விசயம், அவரது பெற்றோருக்குத் தெரியவரவே, கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அந்த பெண்ணிடம் கேட்டபோது, அவர் நடந்ததைக் கூறியுள்ளார். இது தொடர்பாக இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

sexual assault

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை அரசு தரப்பில் 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதில், தோழியின் தந்தை நடராஜன் தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, நடராஜனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.