மணப்பாறை அருகே தலையில் கல்லைப் போட்டு இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அருகே உள்ள சின்னாகவுண்டன் பட்டி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் அங்குச் சென்று பார்த்தபோது, இளம் பெண் தலையில் கள்ளைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்து, அவளது முகம் முற்றிலுமாக சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனால், போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை.

killed

இதனையடுத்து, பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அந்தப் பெண்ணின் தலையில் போடப்பட்ட கருங்கல் என்றும், அந்தப் பெண்ணின் உடல் அருகே மதுபாட்டில், சிகரெட், மூக்குக் கண்ணாடி ஆகியவை கிடந்துள்ளன.

killed

இதனால், கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த தடயங்கள் மூலம் கொலை செய்யப்பட்ட பெண் யார், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார், கொலையாளி யார் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.