சினிமா பட பாணியில் மலையிலிருந்து குதித்த காதல் ஜோடி உயிர் தப்பிய உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த நீலாம்பரி ஆகிய இருவரும் மனம் ஒன்றுபட்டுக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரது வீட்டிலும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

lovers suicide attempt

இதனால், மனமுடைந்து காணப்பட்ட காதல் ஜோடி, தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில், தற்கொலை எண்ணத்துடன் புனித ஸ்தலமான சப்தகிரி மலை மீது ஏறிய காதல் ஜோடி, "புன்னகை மன்னன்" சினிமா பட பாணியில் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

lovers suicide attempt

இதில், இருவருமே மலைகளின் பாறைகளில் சிக்கி உருண்டு வந்துள்ளனர். இதனால், இருவரும் சிறு காயங்களுடன் அங்குள்ள மலை இடுக்குகளில் சிக்கி மயங்கி உள்ளனர்.

lovers suicide attempt

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், அப்பகுதி மக்களும் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, காதல் ஜோடி தற்கொலை செய்யும் காட்சிகள், இணையத்தில் பரவியதால், அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.