நள்ளிரவு பூஜையின்போது மர்மப்பொருள் வெடித்து சாமியார் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே இறையாமங்கலத்தில், சாமியார் கோவிந்தராஜ், ஜோதிடம் மற்றும் சித்த வைத்தியம் பார்த்து வந்துள்ளார். அவ்வப்போது, பரிகாரத்திற்காக சில சிறப்பு யாகங்களும் அவர் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

godman death

இந்நிலையில், அவரது வீட்டில் நள்ளிரவு நேரத்தில் அவர், தனது சிஷ்யை லாவண்யாவுடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பூஜைக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, அங்கே யாகமும் வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பூஜை தொடங்கிய நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே, பூஜையில் வைக்கப்பட்டிருந்த ஒரு மர்மப் பொருள் வெடித்து, அருகிலிருந்த சாமியார் கோவிந்தராஜ் மீது தீ பிடித்துள்ளது. இதில், அவருக்கு உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், உடன் இருந்த அவரது சிஷ்யையான லாவண்யாவுக்கு எந்த காயமும் ஏற்படாமல் தப்பியதாகத் தெரிகிறது.

godman death

இது குறித்து விரைந்து வந்த போலீசார், சாமியாரின் சிஷ்யை லாவாண்யாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பூஜையின் போது வெடித்த மர்மப் பொருள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.