வெறித்தனம் உருவான விதம் குறித்து மனம் திறந்த நித்யராஜ் !
By Aravind Selvam | Galatta | September 09, 2019 15:39 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் தளபதி விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் நித்யராஜ் படம் குறித்த சில சுவாரசிய விஷயங்களை கலாட்டாவுடனான பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.
விஜயுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும்.வெறித்தனம் பாடலில் ஒரு கடினமான ஸ்டெப்பை அசால்டாக சிங்கிள் டேக்கில் ஆடியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் அளித்த சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள கீழே வீடீயோவை காணலாம்