புதுக்கோட்டையில் ஒருவர் பாம்பைப் பிடித்துக்கொண்டு போதையில் தள்ளாடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை புதிய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சந்தைப்பேட்டைப் பகுதியில், குடிபோதையில் ஒருவர் கையில் 7 அடி நீளமுள்ள பாம்புடன் வந்து பொதுமக்களை மிரட்டும் வகையில் நடந்துகொண்டார். கையில் பாம்புடன் மீன் மார்க்கெட்டிற்குள் நுழைந்த போதை ஆசாமி, மீன் வியாபாரிகளிடம் பாம்பை வைத்துக் கொண்டு மீன் கேட்டும் கலாட்டா செய்தார்.

snake

போதையின் உச்சக்கட்டமாக, மீன் கடையில் உள்ள தராசில் உயிருடன் இருந்த பாம்பை எடை போட்டும், மீன் வாங்க வந்த பொதுமக்கள் மீது உயிருடன் இருந்த பாம்பைப் போட்டும் மிரட்டும் தொனியில் அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.

snake

இதனால், மீன் வாங்க வந்த பொதுமக்கள், மீன் வியாபாரிகள் பலரும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மட்டும், உயிருடன் பிடிபட்ட பாம்பைப் பார்க்கும் ஆர்வத்தில், போதை ஆசாமியைப் பின்தொடர்ந்து கேலியும், கிண்டலும் செய்து விளையாடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.