பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியதாக ஓவிய ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு அடுத்த முருக்கோடை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

teacher for vulgar pictures

இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 19 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுடன் முருகேசன் என்பவர், தற்காலிக ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வகுப்பில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி அளித்துக்கொண்டிருக்கும்போது, தனது செல்போனில் மாணவிகளுக்குச் சிறந்த ஓவியங்களைக் காண்பிப்பது போல், ஆபாசப் படங்களைக் காண்பித்துள்ளார். இதனால், மாணவர்கள் என்ன சொல்வது தென்று தெரியாமல், மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

teacher for vulgar pictures

இதனையடுத்து, பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள், இது குறித்து தங்களின் பெற்றோரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர், அடுத்தநாள் பள்ளிக்கு நேரில் வந்த குழந்தைகளின் பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் ஓவிய ஆசிரியரின் செயல்பாடுகள் குறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்ததால், ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து, வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

teacher for vulgar pictures

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஓவிய ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பள்ளி வகுப்பறையில் ஆசிரியர், மாணவிகளுக்கு ஆபாசம் படம் காட்டியது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை கடும் ஏற்படுத்தி உள்ளது.